ரோட்டில் பல்லவன் செய்த செயல், செம ஷாக்கான சோழன்... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
நாளுக்கு நாள் ஒரு சீரியலுக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது என்றால் அது அய்யனார் துணை சீரியலுக்காக தான்.
காரணம் வழக்கமான அண்ணன்-தம்பிகள் கதை என்றாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருக்கிறது.
இப்போது கதையில் ராகவ் தொல்லையால் நிலா வேலையை விட்டுவிட்டார். அதற்காக அவர் வருத்தப்பட அவரை சமாதானம் செய்துவிட்டு ராகவை நேரில் சந்தித்து சரமாரியாக அடித்துவிட்டார் சோழன்.
பாண்டியோ வானதி பேச மாட்டாளா, பார்க்க மாட்டோமா என ஏங்கி கொண்டிருக்கிறார். சேரன் சந்தாவிடம் சென்று இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என கூறிவிட்டு வந்துவிட்டார்.

புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், சோழன் கார் சவாரிக்காக ஒரு இடத்தில் காரில் நிற்கிறார். அங்கு பல்லவன் வர அவரை பார்த்து கீழே இறங்கலாம் என சோழன் நினைக்கும் போது பல்லவனுடன் பஸ ஸ்டாண்ட் பெண் இருப்பதை பார்க்கிறார்.
இருவரும் ஹோட்டலுக்குள் செல்வதை கண்டு சோழன் செம ஷாக் ஆகிறார்.
