பதறிய நிலாவிற்கு எதிர்ப்பாராமல் சோழன் கொடுத்த ஷாக்... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
நிலா தன்னை சோழன் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்ற கோபத்தில் நீதிமன்றத்தில் அவர் விவாகரத்து கேட்டுவிட்டார்.
நீதிமன்றத்தில் நடந்த விஷயத்தை நிலா வீட்டில் கூற அனைவரும் ஷாக் ஆகி சோழனை மிகவும் திட்டினார்கள். நிலாவும் என்னால் இனி இந்த வீட்டில் இருக்க முடியாது என வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

சோழனும் அந்த சோகத்தில் நானும் வீட்டைவிட்டு செல்கிறேன் என கிளம்பினார். நிலா அவரது தோழி வீட்டிற்கு செல்ல அவருக்கு ஒரு போன் வருகிறது, சோழனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாக பல்லவன் கூறுகிறார்.
அந்த செய்தி கேட்டு பதறிய நிலா மருத்துவமனை வந்து சோழனை பார்க்கிறார்.

எபிசோட்
மருத்துவமனையில் சோழனை பார்த்து நிலா மிகவும் வருந்துகிறார். பின் சேரன் மற்றும் பாண்டி இருவரும் சோழனுக்காக நிலாவிடம் கெஞ்சி பேசுகிறார்கள், அவனை மன்னியுங்கள் என்கின்றனர்.
ஆனால் அப்போது நிலா இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்கிறார்.

சோழன் செய்த விஷயங்களை நினைத்து பார்க்கும் நிலா அய்யனார் துணை வீட்டிற்கு செல்ல முடிவு எடுக்கிறார். நான் உங்களுக்கு 6 மாதம் நேரம் கொடுக்கிறேன், அந்த 6 மாதத்தில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை பார்த்து நான் முடிவு எடுக்கிறேன் என்கிறார்.
நான் வீட்டிற்கு வருகிறேன் ஆனால் உங்களது மனைவியாக இல்லை, நான் அங்கு ஒரு Paying Guest போல தான் இருப்பேன் என்கிறார். அதைக்கேட்டதும் சந்தோஷத்தில் சோழன் தனது நாடகத்தை மறந்து பேச அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

விபத்து என சோழன் போட்டது நாடகம் என தெரிந்துவிட்டது, நிலா என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.