குடும்பத்தினருக்கு தெரியவந்த சோழன்-நிலா பற்றிய திடுக்கிடும் தகவல்- அடுத்த வார பரபரப்பான புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்றாக உள்ளது அய்யனார் துணை.
கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் பல திருப்படங்கள், அதிக பரபரப்பு என கதையே வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
நிலா ஒருபக்கம் விவாகரத்து வாங்க முயற்சி செய்ய அதை தடுத்துக்கொண்டே வருகிறார் சோழன்.
இன்னொரு பக்கம் கார்த்திகாவின் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.
அடுத்த வாரம்
இன்று சில அழகிய காட்சிகளுடன் அய்யனார் துணை முடிவுக்கு வந்தது. பின் அடுத்த வார எபிசோடிற்கான புரொமோவில், பாண்டியனுக்கு சோழன்-நிலா விவாகரத்து வாங்க சென்ற விஷயம் தெரிய வருகிறது.
இதனால் பாண்டியன் வீட்டில் வந்து சோழனின் சட்டையை பிடிக்க நிலா, நான் தான் விவாகரத்து பெற முயற்சி செய்தேன் என கூறுகிறார். இதனால் பாண்டியன் மற்றும் பல்லவன் செம ஷாக் ஆகிறார்கள்.

Optical illusion: கண்களை பரிசோதிக்கும் நுட்பமான படம்!இதில் இருக்கும் “80” கண்களுக்கு தெரிகிறதா? Manithan
