அய்யனார் துணை சீரியலில் சோழனிடம் காதலை சொன்னாரா நிலா?... வெளிவந்த படப்பிடிப்பு தள வீடியோ
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலின் கடைசி எபிசோடில், நிலாவிற்காக வீட்டை அடமானம் வைக்கும் விஷயங்கள் பேசப்படுகிறது.
ஆனால் அந்த விஷயம் வானதிக்கு பிடிக்கவில்லை, பாண்டியிடம் சண்டை போடுகிறார். அவர்கள் மீண்டும் சண்டை போட்டுக்கொள்வதை பார்த்த சோழன் இதுகுறித்து பாண்டி கடைக்கு சென்று அவரிடம் கேட்கிறார்.

அவரும் எப்போது பார்த்தாலும் சண்டை தான், அவளை விடவும் முடியவில்லை என்கிறார். சரி வானதியிடம் பேசிப் பார்க்கலாமே என சோழன் வானதியை அழைத்துச் செல்ல அவர் பேசியதை கண்டு மீண்டும் பாண்டி கடையிலேயே இறக்கிவிடுகிறார்.
வீட்டில் அழுதுகொண்டிருக்கும் பல்லவனை நிலா சமாதானம் செய்கிறார்.

வீடியோ
கதையில் கொஞ்சம் சென்டிமென்ட் காட்சிகள் சென்று கொண்டிருக்க ஒரு சூப்பரான படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் சோழன்-நிலா இருவரும் பீச்சில் இருக்கிறார்கள், நிலா தலையில் பூ இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் ஒன்றே ஒன்று தான்.
பீச்சில் இருவரும் இருப்பதை பார்க்கும் போது நிலா சோழனிடம் காதலை கூறுவிட்டாரோ என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,