செம கொண்டாட்டத்தில் அய்யனார் துணை சீரியல் குழுவினர்.. ஏன் தெரியுமா?
அய்யனார் துணை
சன் டிவி எடுத்துக் கொண்டால் அதிகம் பெண்கள் மையப்படுத்திய கதையாக இருக்கும்.
குடும்பம், குடும்பத்திற்காக பாடுபடும் பெண் என இப்படியே ஒரே மாதிரியான கதைக்களமாக இருக்கும். ஆனால் விஜய் டிவி பக்கம் வந்தால் அப்படி இல்லை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதைக்களமாக அமையும்.
அப்படி ரசிகர்களே வித்தியாசமான கதைக்களம் என கொண்டாடும் தொடர் தான் அய்யனார் துணை.
கொண்டாட்டம்
நிலா, சேரனுக்கு எப்படியாவது கார்த்திகாவுடன் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்.
ஆனால் கார்த்திகாவோ தனது அம்மா மிரட்டலால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார். இவர்களது திருமணம் நடக்குமா இல்லையா என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும்.
இந்த நிலையில் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர் அய்யனார் துணை சீரியல் குழுவினர். அதாவது சீரியல் தொடங்கப்பட்டு 100 நாட்களை எட்டிவிட்டதாம், இதனை சீரியல் நாயகி மதுமிதாவே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களும் அய்யனார் துணை சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.