அய்யனார் துணை சீரியல்: நின்றுபோன திருமணம்.. சந்தாவின் நிலை என்ன? கவலையில் சேரன்!
நின்றுபோன திருமணம்
சேரனுக்கும் சந்தாவுக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில், பிஹாரில் இருந்து வந்த சந்தாவின் மாமா, துப்பாக்கியை வைத்து மிரட்டி சந்தாவை திருமணத்தில் இருந்து இழுத்து சென்றுவிட்டார்.

மீண்டும் சேரனின் திருமணம் நின்றுபோனது அய்யனார் துணை குடும்பத்தை மிகப்பெரிய அளவில் பாதித்துவிட்டது. திருமணம் நின்றுபோனதை விட, சந்தாவிற்கு என்ன ஆனது, அவள் எப்படி இருக்கிறாள் என்பதை பற்றி சேரன் கவலையில் இருக்கிறார்.

இந்த சமயத்தில் வீட்டில் உள்ள மற்றவர்கள் சேரனுக்கு ஆறுதல் கூற, ஒரு கட்டத்தில் 'என்னடா எல்லாரும் என்கிட்ட வந்து துக்கம் விசாரிக்கிறீங்க' என சேரன் கோபமடைந்துவிட்டார்.

சந்தாவின் நிலை என்ன?
இந்த நிலையில், சந்தாவின் அண்ணன் அனிஷிடம் இருந்து பல்லவனுக்கு போன் கால் வருகிறது. அப்போது அனைவரும் கேட்க வேண்டும் என்பதற்காக பல்லவன் போனை ஸ்பீக்கரில் போடுகிறார். 'சந்தாவையும் என்னையும் ஊருக்கு அழைத்து செல்கிறார்கள். சந்தாவிற்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன், திருமணம் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்' என கூறுகிறார்.

அனிஷ் பேசியது கேட்டபின் சேரன் சற்று ஆறுதல் அடைகிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri