பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல்

By Yathrika Dec 25, 2025 01:40 PM GMT
Report

அய்யனார் துணை

அய்யனார் துணை, மற்ற சீரியல்களை போல கிடையாது.

காரணம் கதையே கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது, அடுத்து எல்லா சீரியல்களை போல ஒரு கருவை வைத்து இழுத்தடிக்காமல் உடனே உடனே முடிக்கிறார்கள்.

இப்போது கூட கதையில் பல்லவன் அம்மா சரியானவர் இல்லை என்பதை அவர் என்ட்ரி கொடுத்த சில எபிசோடுகளிலேயே வெளிக்காட்டிவிட்டனர். அதேபோல் பாண்டி கடை வாங்க வேண்டும் என நினைக்க உடனே குடும்பத்தினர் பண ஏற்பாடு செய்து விட்டனர்.

பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial Today Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், பல்லவன், சோழன்-நிலாவுடன் காரில் செல்லும்போது தனது அம்மாவை வைத்து புலம்பிக்கொண்டு வருகிறார். நிலா அவரை சமாதானம் செய்து காலேஜிற்கு அனுப்பி வைக்கிறார்.

அதன்பின் சோழனிடம் பேசும்போது, நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா என நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறுகிறார்.

பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial Today Episode

உடனே சோழன் இவ்வளவு நடந்துள்ளது என்னை கூப்பிடலாமே என கேட்க உங்களுடன் தான் பல்லவன் தூங்கிக்கொண்டு இருந்தான், அவனுக்கு தெரிந்தால் கஷ்டப்படுவான் என்று தான் எழுப்பவில்லை என்கிறார்.

அந்த அம்மாவை சும்மா விடக்கூடாது என அவரது வீட்டிற்கு சோழன் மற்றும் நிலா அவர்களது வீட்டிற்கு செல்கிறார்கள். ஆனால் அவர்கள் சென்றபோது வீடு பூட்டியிருக்கிறது, இதனால் அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US