தங்க ராசுவிற்கு நெத்தியடி பதிலடி கொடுத்த அழகுமதி.... அழகே அழகு சீரியலின் புதிய புரொமோ
அழகே அழகு
விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு சில சீரியல்களை புதியதாக களமிறக்கினார்கள்.
சுட்டும் விழி சுடரே, கனா கண்டேனடி, அழகே அழகு என்று 3 புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது. சுட்டும் விழி சுடரே அம்மா-மகள் பற்றிய கதை, கனா கண்டேனடி தோழிகள் பற்றிய கதையாக உள்ளது.
அழகே அழகு என்ற சீரியல் இரண்டு அழகான பெண்களின் புகுந்த வீட்டு கதையாக அமைந்துள்ளது.

புரொமோ
கடந்த சில எபிசோடுகளில் தன்னை வில்லனாக நினைத்துக்கொண்டிருக்கும் தங்கராசுவை போயா என்ற ஒற்றை வார்த்தையில் ஆப் செய்துவிட்டார் அழகு மதி. இதுவரை சுரேஷ் திருமண காட்சிகள் இடம்பெற தற்போது அவரின் வேலை பிரச்சனை தொடங்குவதாக தெரிகிறது.

தங்கராசு இன்று சுரேஷ் வீட்டிற்கு வந்து அழகுமதியை அவரது கணவர் மீது போட்ட வழக்கை வாபஸ் வாங்க கூறுகிறார், ஆனால் அழகுமதி அவர் செய்த தவறு அது, அதை அவர் தான் சரிசெய்ய வேண்டும் என்கிறார்.
உடனே தங்கராசு உன் அப்பாவிற்கு செலவு எல்லாம் செய்தது எதற்காக நினைத்தாய் என கேட்க அதற்கு அழகுமதி நானா உங்களை செலவு பார்க்க சொன்னேன் என தரமான பதிலடி எல்லாம் கொடுக்கிறார்.
இதோ சீரியலின் புதிய புரொமோ,