விஜய் டிவியின் அழகே அழகு சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன தெரியுமா?...
அழகே அழகு
குடும்ப கதைக்களத்தை மையப்படுத்தி விஜய் டிவியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
அப்படி குடும்ப கதைக்கொண்ட தொடர்களில் ஒன்றாக உள்ளது அழகே அழகு. இந்த வருடம் ஜனவரி மாதம் 26ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அழகே அழகு.
மலர் மற்றும் மதி நேர்எதிர் எண்ணம் கொண்ட இரு மருமகள்களின் கதையாக இந்த தொடர் உள்ளது. மிகவும் எதார்த்தமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் வசனங்கள் எல்லாம் மக்களை கவர்ந்துள்ளன.

கதைக்களம்
அன்ஷிதா, நக்ஷத்ரா, பிரேம்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்போது கதையில் சுரேஷ்-மதி ஆகியோரின் கதைக்களம் செல்கிறது. மதியின் அப்பாவை மிரட்டி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார் வில்லன்.

அடுத்த வார கதைக்களத்தில் மதிக்கு விருப்பமே இல்லாமல் திருமணம் நடக்கிறது, சுரேஷ் தனது மாமா கூறியதற்காக அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.