நிச்சயதார்த்தம் நின்றுபோன பிறகு திருமணம் குறித்து பேசிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா- என்ன கூறுகிறார் பாருங்க
பாக்கியலட்சுமி சீரியல்
எப்போதும் குடும்பம், குடும்பம் என வாழ்ந்த பாக்கியா தனது கணவர் ஏமாற்றியதை தெரிந்து இப்போது ஒரு புது பெண்ணாக வளர்ந்து வருகிறார் பாக்கியலட்சுமி.
ஏமாற்றியதை நினைத்து கவலைப்படாமல் அதில் இருந்து வெளியே வந்து தனது எதிர்காலத்திற்காக உழைத்து வருகிறார், அப்படி வாழும் போது பெரிய சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்.
சமையலை தொடர்ந்து இப்போது பாக்கியா ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் தொடங்கியுள்ளார். புதிய என்ட்ரீயாக ரஞ்சித் உள்ளே நுழைந்துள்ளார், இனி அவரது காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை திவ்யா கணேஷ்
திவ்யா கணேஷிற்கு தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நின்றது. அண்மையில் ஒரு பேட்டியில் திவ்யா திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், நாம் எதிர்ப்பார்க்கும் படி யாரும் இருக்க மாட்டார்கள், உண்மைதானே.
இப்போதெல்லாம் நிறைய பேர் திருமணம் செய்கிறார்கள், ஆனால் விட்டுச்சென்று விடுகின்றனர், கூட இருப்பதில்லை. அதுபோன்ற உறவு எதற்கு வருகிறது, எதற்கு போகிறது என்பதே தெரியவில்லை என திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

விவாகரத்திற்கு பிறகு தனுஷ் என்னிடம் கூறிய விஷயம் இதுதான்- செல்வராகவன் ஓபன் டாக்
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை முறையைக் கைவிடுக... விமான நிலைய நிர்வாகிகள் கோரிக்கை News Lankasri