பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவரும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்துவிட்டனர். ராதிகா அந்த குடும்பத்திடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
அதனால் விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது சீரியலில் சுசித்ரா
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோயின் ஆன சுசித்ரா தற்போது வேறொரு புது தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சிந்து பைரவி என்ற கன்னட சீரியல் தான் அது. சன் நெட்வொர்க்கின் கன்னட சேனல் ஆன உதயா டிவியில் தான் அந்த சீரியல் விரைவில் வர இருக்கிறது.
தமிழில் சன் டிவியில் விரைவில் வர இருக்கும் ஆடுகளம் என்ற புது சீரியலின் கன்னட ரீமேக் தான் சிந்து பைரைவி என்பது குறிப்பிடத்தக்கது.