ஏ.ஆர். ரகுமான் யார் என்றே தெரியாது, அதெல்லாம் கால் விரலுக்கு சமம்- மோசமான விமர்சனம் செய்த பாலகிருஷ்ணா, கோபத்தில் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஏராளமானோர் படங்களில் நடிக்கிறார்கள். சினிமா பின்னணி இல்லாத நடிகர்கள் என சில பேரை தான் கூற முடியும்.
அப்படி சினிமா பின்னணியில் திரையுலகிற்கு வந்து பல படங்கள் நடித்து முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இருப்பவர் பாலகிருஷ்ணா. அண்மையில் இவர் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை இழிவுப்படுத்தி பேசியிருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில் அவர், ஏ.ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம்.
மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என பேசியுள்ளார். அந்த பேட்டி வெளியாக அதைக்கேட்ட ரசிகர்கள் பாலகிருஷ்ணாவின் கருத்துக்கு பெரிய எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.