நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு 3 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சை.. இப்போது எப்படி இருக்கிறார்
பாலகிருஷ்ணா
தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தற்போது தனது 111-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சண்டை காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் டூப் பயன்படுத்தாமல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
விபத்துக்கு பிறகு உடனடியாக பாலகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இடது முழங்காலில் ஏற்பட்ட தசை கிழிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணா, முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தனது 111-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri