சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரச்சனையால் வெளியேறிய நடுவர் பென்னி தயால்- சோகமான பதிவு
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக பல சீசன்கள் ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
இந்த பாடல் நிகழ்ச்சி மூலம் பலர் தங்களது திறமையை வெளிக்காட்டி சினிமாவில் சாதித்து வருகிறார்கள். இதில் டைட்டில் ஜெயிக்காத பலருக்கும் கூட சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது சூப்பர் சிங்கர் பெரியவர்களுக்கான 8வது சீசன் நடந்து வருகிறது. வழக்கம் போல் பிரியங்கா மற்றும் மாகாபா தான் தொகுப்பாளர்களாக இருக்கிறார்கள், மிகவம் கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒரு ஜாலியான நடுவராக இருந்து வந்தவர் பென்னி. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இனி தான் சூப்பர் சிங்கர் பற்றி எதுவும் பதிவு போட போவதில்லை என்றும் அதில் இருந்து வெளியேறுகிறேன்.
எல்லாம் மோசமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, நான் சாதாரண மனிதன், எல்லாவற்றிற்கும் நன்றி என பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் என்ன ஆனது சார் என கமெண்ட் போடுகின்றனர்.