ஏண்டா அந்த படத்தில் நடித்தோம் என உள்ளது, வருத்தப்பட்ட நடிகை பானுப்ரியா.. எந்த படம் தெரியுமா?
பானுப்ரியா
திறமை, அழகு, நடிப்பு, நடனம் என அனைத்திலும் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா.
ஆராரோ ஆரிரரோ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.
தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்போது பானுப்ரியா படங்கள் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார், நல்ல கதையுள்ள படங்கள் வந்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
வருத்தம்
இந்த நிலையில் நடிகை பானுப்ரியா ஏண்டா நடிச்சோம் என ஃபீல் பண்ணிய படம் குறித்து கூறியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வந்த நாட்டியம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தான் வருந்துகிறேன்.
இதில் அம்மா கதாபாத்திரத்தில் பானுப்ரியா நடித்திருந்தார், ஆனால் படத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. கதை சொல்லும் போது கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என சொன்னதாகவும் நிறைய பில்டப் செய்துவிட்டு கடைசியில் தனது கதாபாத்திரம் ஒன்றுமே இல்லை.
ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் என்றும், மகளை உத்வேகம் செய்யும் கதாபாத்திரம் என்றும் சொன்னார்களாம். ஆனால் கடைசியில் பார்த்தால் அப்படி இருக்கவில்லை.
நடுவில் நிறுத்த முடியாது சண்டை வரும் என்று நினைத்து நடித்து முடித்தேன், ஆனால் அதற்காக பீல் செய்தேன் என கூறியுள்ளார்.