மூளையில் இரத்தக்கசிவு.. பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின் பரிதாப நிலை
ஒவ்வொரு விழா நாட்களிலும், பல தொலைக்காட்சிகளில் அனல்பறக்கும் பட்டிமன்றங்கள் நடைபெறும்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றதிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதிலும், ராஜாவும், பாரதி பாஸ்கரும் பேசுவதை பார்ப்பதற்கு பலரும் ஆவலுடன் இருப்பார்கள்.
பாரதி பாஸ்கரின் பேசு, மிகவும் நகைச்சுவையாகவும், சமூக கருத்துடனும் இருப்பதால், அவருடைய உரை, பலரையும் ஈர்க்கும்.
இந்நிலையில் பாரதி பாஸ்கர் குறித்து, மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், பாரதி பாஸ்கருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது பாரதி பாஸ்கருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.