10வது திருமண நாளில் தனது கணவருடன் எடுத்த சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா- இதோ பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் இருந்த சூப்பர் தொகுப்பாளர்களில் ஒருவர் பாவனா. இவர் நடனம், பாடல் என நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பின் கிரிக்கெட் விளையாட்டு பக்கம் சென்று அங்கேயும் தொகுப்பாளர் வேலையை செய்து வந்தார், ஐபிஎல் போட்டிகளிவ் இவர் தொகுத்து வழங்கியது மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
அடுத்து பாவனா விஜய் தொலைக்காட்சியிலேயே புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என பார்த்தால் கலர்ஸ் தமிழ் டிவிக்கு சென்றுள்ளார். அதில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம்.
இதற்கு இடையில் பாவனா தனது கணவருடன் எடுத்த புதிய புகைப்படங்களை பதிவு செய்து, இவரை எனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகம் பார்த்திருக்க முடியாது, காரணம் இவருக்கு சோஷியல் மீடியா பிடிக்கவே பிடிக்காது.
10வது திருமண நாளில் கணவருடன் இந்த புகைப்படங்கள் ஷேர் செய்வது சந்தோஷம் என பதிவு செய்துள்ளார்.