மிகப்பெரிய சிக்கலில் பெரிய பட்ஜெட் படங்கள் - தயாரிப்பளார்களின் நிலை இதுதானா
தென்னிந்திய திரையுலகில் தற்போது பல பிரமாண்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆம் மலையாளத்தில் ப்ரியாதார்க்ஷன் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் மரைக்காயர்.தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் ராமச்சரன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர்.
அதுமட்மின்றி மணி ரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகமே காத்திருக்கும் பொன்னியின் செல்வன். மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சாரியா.
இதில் சில திரைப்படங்கள் சென்ற வருடமே வெளியாகவேண்டிய நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
பல கோடி செலவில் உருவாகியுள்ள இப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போவதினால், படத்தினுடைய செலவும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்று தெரிவிக்கின்றார்கள்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் பிரச்சனையில் சிக்குகின்றனர். இதனால் கூடிய விரைவில் அணைத்து பிரச்சனைகளும் முடிந்து திரையரங்கங்கள் திறக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.