சித்தி 2 சீரியலில் அடுத்து உங்களுக்கு வரப்போகிறது மிகப்பெரிய சர்ப்ரைஸ்- என்ன தெரியுமா?
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். காலை 10 மணியில் ஆரம்பித்து இரவு 10 மணி வரை ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகும்.
இடையில் 3 மணி நேரம் படம் ஒளிபரப்பாகும் அவ்வளவு தான். சீரியல்கள் அனைத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு தான் உள்ளது.
கொரோனா லாக் டவுன் முடிந்தபிறகு சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் சித்தி 2. ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துவந்த இந்த சீரியலில் இருந்து அவர் திடீரென விலகினார்.
தற்போது இருவரை முக்கியமாக வைத்து சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் முக்கிய நாயகனாக நடிக்கும் லோகநாதன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் வரும் வாரத்தில் சித்தி 2 சீரியலில் மிகப் பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.