Bigg Boss 9: ஆதிரை வெளியேறும் முன் செய்த காரியம்.. கதறி கதறி அழுத பார்வதி!
பிக் பாஸ் 9ல் இருந்து இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். முதலில் FJ எலிமினேட் ஆன நிலையில் அதனை தொடர்ந்து இரண்டாவதாக ஆதிரை எலிமினேட் ஆனார்.
இரண்டாவது முறையாக எலிமினேட் ஆவது பற்றி மிகவும் ஆதங்கத்துடன் அவர் பேசினார். "இன்னும் என்ன தான் பண்றது, என்ன தான் வேணும் இவங்களுக்கு" என ஆடியன்ஸை குறை கூறினார் அவர்.

பார்வதிக்கு கொடுத்த விஷயம்
ஆதிரை அவரது குடும்பத்தை பிக் பாஸ் வீட்டுக்கு வர வைத்து 24 மணி நேரம் உடன் இருக்கலாம் என அவருக்கு ஒரு விஷயம் கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் எலிமினேட் ஆகிவிட்டதால் அதை கனி, பாரு அல்லது கம்ருதின் ஆகியோரில் ஒருவருக்கு கொடுக்கலாம் என பிக் பாஸ் கூறினார்.
ஆதிரை அதை பாருவுக்கு கொடுப்பதாக கூற, உடனே பாரு கதறி கதறி அழுது அவருக்கு நன்றி கூறினார்.
