நான் சினிமாவை விட்டு விலகுகிறேன், அடுத்த பிளான் இதுதான்... பிக்பாஸ் அரோரா அதிரடி முடிவு
பிக்பாஸ் 9
விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
முதல் சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டது, அவர் தொடர்ந்து 7 சீசன்களை வரை தொகுத்து வழங்க 8 மற்றும் 9வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார்.

கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு பொங்கலுக்கு முன் முடிவுக்கும் வந்தது. கானா வினோத் பிக்பாஸ் 9 பட்டத்தை ஜெயிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கையில் அவர் ரூ. 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.
பின் பிக்பாஸ் 9வது சீசன் பட்டம் பிரபல சீரியல் நடிகை திவ்யா கணேஷிற்கு சென்றது.
அரோரா
இந்த பிக்பாஸ் 9வது சீசனில் முதல் நாள் முதல் பைனலுக்கு கடைசி வரை விளையாடிய போட்டியாளர்களில் ஒருவர் தான் அரோரா. போட்டோ ஷுட்கள், ஆல்பம் பாடல்கள் என ஆக்டீவாக இருந்த அரோரா இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

அதாவது இனி அவர் சினிமா பக்கம் வரப்போவதில்லையாம், சினிமாவில் இருந்து விலகுகிறாராம்.
Pollandல் தனது படிப்பை தொடர முயற்சி செய்து வருகிறாராம், அங்கு வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் பெற்றதும் கிளம்பிவிடுவேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
