பிக் பாஸ் 9ல் அதிகமாக சம்பளம் பெறுவது இவரா? போட்டியாளர்களின் சம்பளம் என்ன?
பிக் பாஸ் 9
கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் வெளியேறினர். தற்போது 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளதால், ஆட்டமும் சூடு பிடித்து வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதில் கம்மியாக மற்றும் அதிகமாக சம்பளம் பெரும் போட்டியாளர்கள் மற்றும் அவர்களது சம்பளம் குறித்து கீழே காணலாம்.

சம்பளம் என்ன?
இந்த சீசனில் மிகவும் கம்மியாக சம்பளம் வாங்கியது கானா வினோத், சுபிக்ஷா, கலையரசன். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 8 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது.
அடுத்து ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்குவோர் பட்டியலில் கனி, ஆதிரை, துஷார், எஃப் ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இன்ஸ்டா பிரபலம் அரோராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.
சபரி, பிரவீன் காந்தி, கம்ருதீன், அப்சரா, திவாகர், பிரவீன் ராஜ் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறதாம். மேலும், விஜே பார்வதிக்கு ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் பெற்று வருகிறாராம்.
அதை தொடர்ந்து, வைல்டு கார்டு போட்டியாளர்களான பிரஜன், அமித், திவ்யா கணேஷ், சாண்ட்ரா ஆகியோர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்களாம்.

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri