யாஷிகா பிரேக்அப் செய்தது ஏன்? நிரூப் சொன்ன காரணம்
நடிகை யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலர் நிரூப் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக. கலந்துகொண்டார். வாய்ப்பு கிடைத்ததே யாஷிகாவால் தான் என அவரே வெளிப்படையாக கூறி இருந்தார்.
ஷோவின் இறுதி வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு ஐந்தாவது இடம் பிடித்து வெளியில் வந்திருக்கிறார். தற்போது நிரூப் அளித்து இருக்கும் பேட்டியில் அவர் யாஷிகாவை காதலித்தது உண்மைதான் என்று கூறி இருக்கிறார்.
மேலும் பிரேக்கப் பற்றி பேசிய அவர் எங்களுக்கு செட் ஆகாததால் பேசி பிரிந்துவிட்டோம், ஆனாலும் தற்போதும் நண்பர்களாக தான் இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே ஒரு லைவ் வீடியோவில் நிரூப் யாஷிகாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்தது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இப்போது 'செட் ஆகவில்லை பிரிந்துவிட்டோம்' என கூறி இருக்கிறார்.