என் உயிர் இருக்கும் வரை அது நடக்காது- மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து போனி கபூர் அதிரடி
நடிகை ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது ஒரு பிரபலம்.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார்.
சினிமாவில் பீக்கில் இருந்த போதே அதாவது 1996ம் ஆண்டு போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
2018ம் ஆண்டு துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்பு திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகையின் பயோபிக்
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார்.
அவர் அண்மையில் ஒரு பேட்டியில், அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார், அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும்.
அதனால் அவரது பயோபிக் உருவாகாது, நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan
