புரூஸ் லீ-ன் மர்மமான மரணத்திற்கு என்ன காரணம் தெரியுமா? 50 வருடங்களுக்கு பின் வெளியான அதிர்ச்சி தகவல்
புரூஸ் லீ
குங்ஃபூ தற்காப்பு கலை இன்று உலகளவில் மிகவும் பிரபலமாக தெரிய முக்கிய காரணமாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் புரூஸ் லீ.
சீன வம்சாவளியை சேர்ந்த புரூஸ் லீ அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறு வயதிலே தனது குங்ஃபூ கலையில் மாற்றங்களை கொண்டு வந்த இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரியளவில் பிரபலமானார்.
புரூஸ்-லீ முதல் திரைப்படமான தி பிக்பாஸ் கடந்த 1971-ம் ஆண்டு வெளியானது, பெரிய வசூல் சாதனையை படைத்த இப்படம் ஆசியாவில் மட்டும் 12 மில்லயன் டாலர்கள் வரை வசூலித்தது.
மரணத்திற்கான காரணம்
மேலும் கடைசியாக இவர் நடிப்பில் எண்ட்ர் தி டிராகன் திரைப்படம் வெளியானது, ஆனால் இப்படம் வெளியாகும் முன்பே புரூஸ்-லீ மறைந்தார். தலைவலியால் தூங்க சென்ற புரூஸ்-லீ பின்னர் நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் 32-வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் மர்மமாக இருந்தது வந்தது.
இந்நிலையில் இவரின் மரணம் குறித்து 50 ஆண்டுக்களுக்கு பிறகு கிளினிக்கல் ஜர்னல் என புத்தகத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் புரூஸ் லீ-ன் மூளை பெரிதாகி இறந்ததாக கூறப்பட்டு இருகிறது.
புரூஸ் லீ உடற்பயிற்சிகாக அதிக புரோட்டின்கள் எடுப்பார், இதனால் தாகம் காரணமாக அதிக தண்ணீரை எடுத்துள்ளார். அதிகபடியான தண்ணீரை சிறுநீராக பிரிக்கும் சக்தியை அவரின் சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை.
இதன் பின்விளைவாக மூளையில் நீர்விக்கம் ஏற்பட்டு எடை கூடியுள்ளது, மனிதனின் மூளை எடை சராசரியாக 1400 கிராம் இருக்கும், புரூஸ் லீயின் மூளை 1575 கிராமாக பெரிதாகிவிட்டது. இதனால் அவருக்கு திடீர் இறப்பு ஏற்பட்டுள்ளது, இது அவருடைய பிரேத பரிசோதனையில் தெரியவந்தது என அந்த புத்தக்கத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா