தனது 38வது திருமண நாளை மகன், பேரன்களுடன் கொண்டாடிய பாண்டியராஜன்- அவரது மனைவி பிரபலத்தின் மகளா?
பாண்டியராஜன்
தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளி தான்.
பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சினிமா பயணத்தை தொடங்கியவர் தனது 23 வயதிலேயே சினிமா உலகில் இயக்குனராக பிரபலம் அடைந்தார். நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என கொண்ட இவருக்கு கன்னிராசி படம் தான் அவர் முதலில் இயக்கிய படம்.
மிகவும் சிம்பிளாக முடிந்த காமெடி நடிகர் விவேக் மகளின் திருமணம்- அப்பாவை போல என்ன செய்துள்ளார் பாருங்க
அப்படத்தை தொடர்ந்து ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி என படங்கள் இயக்கியிருக்கிறார்.
தன்னை போல சினிமாவில் சாதிக்க துடித்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவானர் நித்யா, நடிகர் மயில்சாமி, நடிகை சீதா போன்ற பலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடைசியாக பாண்டியராஜன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

திருமண நாள்
பாண்டியராஜன் அவர்கள் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியராக வலம் வந்த அவிநாசி மணியின் மகள் தான் வாசுகி.
இந்த நிலையில் நடிகர் பாண்டியராஜன் தனது 38வது திருமண நாளை மனைவி, 3 மகன்கள் மற்றும் பேரன்களுடன் கொண்டாடியுள்ளார்.
You May Like This Video
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan