சுந்தர்.சி-குஷ்பு இருவருக்கும் சேர்த்து இத்தனை கோடி சொத்து உள்ளதா?... உண்மை தகவல்
சுந்தர்.சி-குஷ்பு
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகள் லிஸ்டில் இருப்பவர்கள் தான் சுந்தர்.சி-குஷ்பு.
படத்தில் பணிபுரியும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணமும் செய்துகொண்டனர், இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குஷ்பு, வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வந்தார்.
அதேபோல் அரசியலிலும் களமிறங்கி சில கட்சிகளுக்கு பணிபுரிந்தவர் இப்போது BJP கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர்களது வீட்டில் குஷ்பு மட்டுமே அரசியலில் களமிறங்கி இருந்தார், தற்போது அவரது கணவர் சுந்தர்.சியும் அரசியலில் இறங்கியுள்ளார்.

சொத்து மதிப்பு
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
சுந்தர்.சி. பெயரில் ரூ. 2.97 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், குஷ்பு பெயரில் ரூ. 6.06 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும் உள்ளன. சுந்தர்.சியிடம் ரூ. 50.600 கையிருப்பும், குஷ்புவிடம் ரூ. 30.000 ஆயிரமும் உள்ளதாம்.

சுந்தர்.சியிடம் மனை நிலங்களாக 3 இடங்களும், குஷ்புவிடம் மனை நிலங்களாக 6 இடங்களும் உள்ளன. சுந்தர்.சியிடம் இசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 20.82 கோடியாகவும், குஷ்புவிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 16.79 கோடியாகவும் உள்ளனவாம்.