சினேகா-பிரசன்னா திருமணத்தில் ஏற்பட்ட பெரிய பிரச்சனை.. பின் நடந்த விஷயம், பிரபலம் பகிர்ந்த தகவல்
சினேகா
சிரிப்பின் அழகில் ரசிகர்களை மயக்கிய புன்னகை அரசியாக கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா.
சினிமாவில் டாப் நாயகியாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த நட்சத்திர ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
2 குழந்தைகளும் கொஞ்சம் வளர்ந்த நிலையில் நடிகை சினேகா படங்கள் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொழிலை கவனிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.

திருமணம்
சேரன் ஹீரோவாக நடிக்க கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். கோபிகா, சினேகா, மல்லிகா மற்றும் கனிகா ஆகியோர் நடித்துள்ள இப்படம் 21 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதனால் படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது மேடையில் சேரன் அவர்கள் பேசும்போது, எனக்கும், சினேகாவிற்கும் சுமார் 21 வருடங்கள் நட்பு உள்ளது.
அவரைப் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவல் ஒன்றை கூறியிருந்தார். அதாவது சினேகா-பிரசன்னா திருமணம் நடக்க இவரும் ஒரு காரணமாக இருந்தாராம்.
இவர்கள் இருவரும் காதலித்தாலும், திருமணம் என வந்தபோது பல பிரச்சனைகள் தலைதூக்கி உள்ளது. அப்போது உங்களின் பிரச்சனைகளை பின்னர் பார்த்து கொள்ளலாம், முதலில் திருமணத்தை நடத்துவோம் என கூறி தைரியம் கொடுத்தாராம் சேரன்.
