கூவத்தூர் சர்ச்சை.. முன்னணி நடிகை தவறான தொழில் செய்வதாக அவதூறு! - கொந்தளித்த சேரன்
சினிமா நடிகைகள் தவறான தொழில் செய்பவர்கள் என முன்னணி நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேட்டி கொடுத்த சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவரது வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சை ஆகி இருக்கிறது.
இது பற்றி பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் காரணத்திற்காக ஒரு முன்னணி நடிகையின் பெயரை இப்படி கூறி இருப்பது பற்றி கண்டனங்கள் எழுந்து வருகிறது.
கொந்தளித்த சேரன்
இந்த விவகாரம் பற்றி இயக்குனர் சேரன் கொந்தளித்து X தளத்தில் ட்விட் செய்திருக்கிறார்.
"வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" என சேரன் குறிப்பிட்டு இருக்கிறார்.
வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... @VishalKOfficial @Karthi_Offl
— Cheran (@directorcheran) February 20, 2024
நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் https://t.co/fRNYxH5DAV
![திருமணத்துக்கு வந்திருக்கிறீர்களா.. சம்பளம் யார் கொடுக்கிறார்? பொலிஸை கண்டித்த அமைச்சரின் மனைவி](https://cdn.ibcstack.com/article/a8c10115-12af-45cc-9511-b6340138015e/24-6683b871c6a80-sm.webp)
திருமணத்துக்கு வந்திருக்கிறீர்களா.. சம்பளம் யார் கொடுக்கிறார்? பொலிஸை கண்டித்த அமைச்சரின் மனைவி News Lankasri
![நெருங்கும் இரண்டாவது சுற்று... புதிய அரசியல் நகர்வு: கடும் கோபத்தில் தீவிர வலதுசாரிகள்](https://cdn.ibcstack.com/article/be8f0a42-7344-48b2-ad7c-9fbc9b515a29/24-6684c71c6aa65-sm.webp)