சமந்தா விவாகரத்துக்கு இது தான் காரணம்? சின்மயி சொன்ன விஷயம்
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே திடீரென பிரிவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
விவாகரத்து
அவர்கள் விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், சமந்தா காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றபோது அவர்கள் இடையே பெரிய மனக்கசப்பு இருப்பதை மறைமுகமாக தெரிவித்தார்.
இருப்பினும் நாக சைதன்யா சமந்தாவை பற்றி எந்த பேட்டியிலும் தவறாக பேசவில்லை.

பெண் என்றால் சம்ந்தா போல இருக்கனும்
இந்நிலையில் பாடகி சின்மயி தற்போது அளித்திருக்கும் பேட்டியில் சமந்தா விவாகரத்து பற்றி பேசி இருக்கிறார்.
கணவனை விட பெண் அதிகம் சம்பாதித்தால் அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் வருகிறது, இதனால் அந்த பெண்ணுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது. இந்திய கலாச்சாரம் அப்படி தான் இருக்கிறது.
ஒரு பெண் என்றால் சமந்தா போல தான் இருக்கனும். சமந்தா கடந்த வந்த பாதை, தன்னம்பிக்கை அவர் எல்லோருக்கும் ரோல் மாடல். சமந்தா அவரது திருமண வாழ்க்கை பற்றி என்னிடம் சொன்னதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அது பர்சனல். அனைத்தையும் தாண்டி அவர் தன்னுடைய வெற்றியை காட்டிக்கொண்டிருப்பேன் என இருக்கிறார். அவர் மேலும் வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன் என சின்மயி கூறி இருக்கிறார்.
சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என நடித்து ஆஸ்கார் வாங்க வேண்டும் எனவும் சின்மயி கூறி இருக்கிறார்.

உலகளவில் இதுவரை திருச்சிற்றம்பலம் செய்துள்ள வசூல்.. எத்தனை கோடி தெரியுமா