விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ
சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று சின்ன மருமகள் சீரியல்.
மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள தமிழ்செல்வியின் கதையை சொல்லும் விதமாக இந்த தொடர் உள்ளது. சேது தனது அப்பா ஜெயிலுக்கு சென்று அனுபவித்த வேதனைக்கு நீ தான் காரணம் என தமிழ்ச்செல்வியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.

இப்போது சேதுவிற்கும் ஐஸ்வர்யாவிற்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது தமிழ்ச்செல்வி ஊர் பெரியவர்களை அழைத்துச் சென்று சேதுவுடன் தனக்கு இருக்கும் உறவை முறித்துக்கொண்டு தாலியை வீசி எறிந்துவிட்டு வந்துவிட்டார்.
அப்பத்தாவும் தனது மகன் குடும்பம் என எதுவும் வேண்டாம் என தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்துவிட்டார்.

புரொமோ
தற்போத சின்ன மருமகள் தொடரின் புதிய புரொமோவில், சேது மற்றும் ஐஸ்வர்யா திருமண செய்ய கோவில் செல்கிறார்கள். அப்போது வழியில் தமிழ்ச்செல்வி விபத்து ஏற்பட்டு ரத்தக் காயத்துடன் வலியா துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்.

யாரோ விபத்தில் அடிபட்டுவிட்டார் என ஓடி வந்த சேது தமிழை பார்த்ததும் செம ஷாக் ஆகிறார்.
அவர் தமிழை மருத்துவமனை அழைத்து செல்வாரா அல்லது கோபத்தில் அங்கேயே விட்டுச்செல்வாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.