பாக்யராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்.. கதறி அழுத சாந்தனு..
கே. பாக்யராஜ்
திரையுலகில் பல சாதனைகளை படைத்த நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் அவர்கள் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவருடைய மறைவு திரையுலகினருக்கு மிகப்பெரிய துயரத்தை அளித்துள்ளது. மருத்துவமனையிலிருந்து பாக்யராஜ் அவர்களின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பார்த்திபன், சுஹாசினி, ராதிகா, ஹெச். வினோத், பிரபு, ரஜினி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன் என அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் நேரில் வந்து தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள் பாக்யராஜ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

விஜய்யை பார்த்ததும் பாக்யராஜின் மகனும் பிரபல நடிகருமான சாந்தனு கதறி அழ, விஜய் அவரை ஆரத்தழுவி துயரத்தை பகிர்ந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.6.2026) மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். pic.twitter.com/6kAJ3Yv7aW
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 27, 2026
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan