காமெடி நடிகர் செந்தில் மகனை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
செந்தில்
80ஸ் காலகட்டத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி, நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் செந்தில். அதுவும் கவுண்டமணி - செந்தில் காம்போ என்றால் சொல்லவே தேவையில்லை.
நடிகர் செந்தில் 1979ல் வெளிவந்த பசி எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் நடித்து வந்த செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து செய்த நகைச்சுவை தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தது.
குழந்தைகள் முன்னேற்ற கழகம், வாங்கனா வணக்கங்கனா, அகத்தியா ஆகிய திரைப்படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார். நடிகர் செந்தில் கடந்த 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
செந்தில் மகன்
இந்த நிலையில் செந்தில் மகன் மணிகண்டன் பிரபு பிரபல மருத்துவர் ஆவார். தனது மகனை மருத்துவர் ஆக்கி அழகு பார்க்கவேண்டும் என்பது செந்திலின் ஆசை கனவாக இருந்துள்ளது.
அதன்படியே அவரும் தற்போது மருத்துவராகியுள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம்..

