லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பண பிரச்சனை- விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல் நடிகர் சங்க இயக்குனராகவும் இருக்கிறார்.
2004ம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அதில் சில படங்களை சொந்தமாகவே தயாரித்தும் உள்ளார்.
இப்போது அவர் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்தின் படப்பிடிப்பில் அதிகம் விபத்துகள் நடந்து வருகின்றன.

நீதிமன்ற உத்தரவு
லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் ரூ. 21.29 கோடி கொடுக்க வேண்டியுள்ளதாம். அதில் ரூ. 15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அந்த தொகையை செலுத்தாவிட்டார் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் எந்த படமும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.