மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிசில்டா குழந்தை மரபணு சோதனை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
மாதம்பட்டி ரங்கராஜ்
தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து சில படங்கள் நடித்தாலும் பிரபல சமையல் தொழிலதிபராக தான் மக்களுக்கு அதிகம் பரீட்சயமானார்.
தமிழகம் மட்டும் இல்லை, ஏன் இந்தியாவை தாண்டி பல நாடுகளிலும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமையல் தொழிலில் வளர்ந்துகொண்டே வருகிறார்.
தொழிலை தாண்டி விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக கலக்கி வந்தார்.
விரைவில் தொடங்க இருக்கும் புதிய சீசனிலும் நடுவராக கலந்துகொள்ள இருக்கிறார்.

அதிரடி தீர்ப்பு
இதற்கு இடையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து குழந்தை கொடுத்து ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்த விஷயம் எல்லாம் மக்களுக்கே நன்றாக தெரியும்.

தற்போது மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிசில்டா வழக்கில் குழந்தைக்கு மரபணு சோதனை நடந்தது. அதில் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என மரபணு பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.