நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு! அதிர்ச்சி காரணம்
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து அதன் பிறகு ஹீரோ ஆனவர் சந்தானம். அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
தற்போது பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் சந்தானம் அதன் ஷூட்டிங்கை சமீபத்தில் முடித்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஒரு வழக்கில் சந்தானம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சந்தானம் கட்டிட கான்ட்ராக்ட்டர் ஒருவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக தான் வரும் ஜூலை 15ம் தேதி நேரில் ஆஜராகும் படி சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு சண்முகசுந்தரம் என்ற கான்ட்ராக்டருக்கு திருமண மண்டபம் கட்ட அட்வான்ஸாக மூன்று கோடி ருபாய் கொடுத்து இருக்கிறார். அந்த பணம் தொடர்பான பிரச்சனையில் தான் பிரச்சனை ஏற்பட்டு இருவருக்கும் நடுவில் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அந்த சம்பவம் பற்றி சந்தானம் மீது அந்த நபர் போலீஸ் புகார் கொடுக்க, அதன் விசாரணைக்கு சந்தானம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.