டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
அருள்நிதி நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் டிமாண்டி காலனி 3 படத்திற்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.
ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனம் தான் டிமாண்டி காலனி 3 மற்றும் 4 ஆகிய அடுத்தடுத்த படங்களை எடுக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
ஆனால் தற்போது தங்களுக்கு தெரியாமல் பேஷன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் மூலமாக டிமாண்டி காலனி 3 படத்தை தயாரித்து ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என ஒயிட்நைட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

தடை
இந்த விவகாரம் சமரசத்தை எட்டும் வரை டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.
மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளிக்க 4 வாரம் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.