இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோன்.. அவரே வெளியிட்ட அறிவிப்பு
தீபிகா படுகோன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோன். ஓம் ஷாந்தி ஓம், ரேஸ் 2, சென்னை எக்ஸ்பிரஸ், பஜ்ரவ் மஸ்தானி, ஜவான், பதான் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் கிங் மற்றும் ராக்கா ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குட் நியூஸ் சொன்ன தீபிகா
நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன்பின், 2024ஆம் ஆண்டு தான் முதல் முறையாக கர்ப்பமாக இருப்பதாக என தீபிகா அறிவித்தார். கடந்த 2025ஆம் ஆண்டு இந்த நட்சத்திர ஜோடிக்கு அழகிய மகள் பிறந்தார்.

இந்த நிலையில், தற்போது தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதற்கு சமந்தா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை: மெழுகுவர்த்தி பஞ்சாயத்து தொடர்பில் மேயர் பிரியா விளக்கம்! IBC Tamilnadu
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri