தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... போட்டோ இதோ
தீபிகா-ரன்வீர்
பாலிவுட் சினிமா ரசிகர்களின் பேவரெட் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்.
இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலானது. பின் இவர்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அவளுக்கு துவா என பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். குழந்தை பிறந்த பிறகு கொஞ்ச நாள் படங்கள் கமிட்டாகாமல் இருந்தார் தீபிகா, பின் ஒரு படத்தில் கமிட்டானவர் நேர பிரச்சனை காரணமாக வெளியேறி இருந்தார்.
தீபிகா 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய முடியாது என கூறிய விஷயம் பேசும் பொருளானது.
குழந்தை
சமீபத்தில் தீபிகா-ரன்வீர் ஜோடி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்கள்.
இந்த நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.