இந்தி படத்தில் மீண்டும் நடிக்கப்போகும் ராஷ்மிகா மந்தனா.. வெளியான புது அப்டேட் இதோ...
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான், வாரிசு,போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் புஷ்பா, சீதா ராமம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த இவர் இந்தியில் அனிமல் படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்முலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
பிறகு,தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தற்போது இவர் புஷ்பா 2, விக்கி கவுஷலுடன் சாவா,சிக்கந்தர், தமிழில் தனுஷுடன் குபேரா போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.

புதிய படம்
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது கவனத்தை ஹாரர் பக்கம் திருப்பிருக்கிறார்.
அதாவது ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் இவர் வேம்பையர் ஆப் விஜயநகரம் என்ற ஹாரர் கலந்த காமெடி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த ஹாரர் படம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu