சீரியலில் நடிக்க மாட்டேன் என்று கூறிய தேவதர்ஷினி.. காரணம் இது தானா
விடாது கருப்பு, அண்ணாமலை, சிதம்பர ரகசியம், கோலங்கள், ரமணி Vs ரமணி போன்ற பல சீரியல்களில் நடித்து தனக்கென்று இடத்தை பிடித்தவர் நடிகை தேவதர்ஷினி.
சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கிவருகிறார். குறிப்பாக காஞ்சனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.
சின்னத்திரையில் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை உண்டாக்கிய சீரியல், ரமணி Vs ரமணி. இயக்குனர் நாகாவின் சூப்பர் ஹிட் காமெடி தொடரான ரமணி Vs ரமணி தற்போது மூன்றாவது சீசனில் துவங்கவுள்ளது.
முந்தைய இரு சீசன்களில் மிசஸ் ரமணியாக கலக்கி வந்த தேவதர்ஷினி மூன்றாவது சீசனில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் தி பேமிலி மேன் 2 சீரியஸில் தேவதர்ஷினியின் கதாபாத்திரம் அதிக கவனத்தை பெற்றது தானாம்.
அதன்பிறகு, இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்துள்ளதால், இனி சீரியல் வேண்டாம் என ஒதுக்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்து வருகின்றன.

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan

உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதம் எது தெரியுமா? 10 ஆண்டுகளில் 34 கோடிக்கும் அதிகமான மக்கள் News Lankasri
