தனுஷ் - ஐஸ்வர்யா இடையே இங்கு தான் கருத்துவேறுபாடு தொடங்கியதாம்! முக்கிய பிரபலம் கிளப்பிய சர்ச்சை..
தமிழ் சினிமாவே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியானது.
18 வருடம் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென பிரிவதாக அறிவித்தது, அனைவருக்கும் ஷாக்கிங்காக இருந்தது என்றே கூறலாம்.
இந்நிலையில் நேற்றிலிருந்து இவர்களின் விவாகரத்து குறித்து பல நட்சத்திரங்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமாக திகழும் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, தனுஷ் தி கிரே மேன் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றபோது அவருடன் ஐஸ்வர்யா, இரண்டு மகன்களும் சென்றனர்.
ஆனால் ஐஸ்வர்யா அங்கிருந்து பாதியிலே மகன்களை தனுஷுடன் விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.


SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
