விவாகரத்துக்கு பின் மகனுக்காக ஒன்றாக வந்த தனுஷ் - ஐஸ்வர்யா! போட்டோ படுவைரல்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே விவாகரத்தை அறிவித்துவிட்டனர். அதற்கு பிறகு அவர்கள் தங்கள் மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை மட்டும் வெளியிட்டு வந்தனர்.
தனுஷ் தனது பட விழாக்களுக்கு மகன்களை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அதே போல ஐஸ்வர்யாவும் அவர்களை பல நிகழ்ச்சிகளுக்கு கூட்டி சென்றார்.
ஒன்றாக வந்த தனுஷ் - ஐஸ்வர்யா
இந்நிலையில் தங்கள் மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக வந்து இருக்கின்றனர். சென்னையில் இருக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் ஸ்கூலில் தான் தனது பள்ளி படிப்பை யாத்ரா முடித்து இருக்கிறார்.
அவர்கள் ஒன்றாக மகன் யாத்ராவை கட்டியணைக்கும் போட்டோக்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

