தனுஷின் விவாகரத்து குறித்து முன்பே சொன்ன செல்வராகவன் !
நடிகர் தனுஷ் நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.
அவர்களின் பிரிவிற்கு காரணமாக பல காரணங்கள் கூறப்பட்டு பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது தனுஷ் விவாகரத்து முடிவு செல்வராகவனுக்கு முன்பே தெரியும் என்றும், அதனால் தான் அவர் கடந்த சில நாட்களாக வாழ்க்கை குறித்த தத்துவ பதிவுகளை வெளியிட்டார் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன் செல்வராகவன் "தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்" என பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை ரீ-ட்வீட் செய்த ரசிகர்கள் தனுஷ் விவாகரத்து முடிவு செல்வராகவனை பாதித்து உள்ளதால் தான், இப்படி மறைமுகமாக பதிவிட்டுள்ளார் என கூறிவருகின்றனர்.
Genius correct ah than solirukaru appo puriyala ippo puriyuthu🙄 https://t.co/i5NboDhDiS
— ⚔️🅳🅴🆅🅰⚔️ (@MemeBoyDeva) January 18, 2022
Apo puriyala😌 ipo puriyudu🥺💔
— Prasanna TPM (@itsPrasannaTPM) January 17, 2022
Stay strong @dhanushkraja https://t.co/MRQVG18RCm