குபேரா படத்தின் கதை இதுதானா! இணையத்தில் லீக்..
குபேரா
தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிற 20ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் குபேரா.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தின் கதை
இந்த நிலையில் குபேரா படத்தின் கதை குறித்து தகவல் இணையத்தில் லீக்காகியுள்ளது.
ஊழல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் பணிபுரியும் ஒரு chartered accountant கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். தனது கணக்கில் உள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் திரும்பப் பெற, அவர் ஒரு பெரிய திட்டத்தை வகுக்கிறார்.
தனுஷ் உட்பட சில சாலையோர பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை போலி அடையாளங்களுடன் போலி தொழிலதிபர்களாக மாற்றி, அவர்களை சுவிஸ் கணக்குகளை திறக்க வைக்கிறார். இருப்பினும், தனுஷ் தனது குருவை விஞ்சும் போது கதையில் திருப்பம் வருகிறது.
நாகார்ஜுனாவுக்கு தெரியாத விஷயங்களை திட்டமிட்டு, முழு அமைப்பையும் தனது லாபத்திற்காக கையாளுகிறார். இப்போது, இருவருக்கும் இடையே ஒரு பெரிய போராட்டம் தொடர, இதில் யார் வெற்றி பெற்றார் என்பதுதான் படத்தின் கதை.

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
