மீண்டும் இணையும் கர்ணன் பட கூட்டணி- வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்
தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிவரும் படங்களில் ஒன்று கர்ணன். மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய ரீச்.
சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயத்தை பற்றி இந்த படம் பேசியுள்ளது. மக்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
தனுஷின் திரைப்பயணத்திலேயே கர்ணன் படம் வசூலில் முதல் இடத்தில் உள்ளதாம்.
இவர்கள் மீண்டும் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் யோசித்து வரும் நிலையில் அதை உறுதி செய்துள்ளார் தனுஷ்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாரி செல்வராஜுடன் மீண்டும் இணைகிறேன் என பதிவு செய்துள்ளார்.
Elated to announce that after the blockbuster success of Karnan, Mari Selvaraj and myself are joining hands once again. Pre production going on,
— Dhanush (@dhanushkraja) April 23, 2021
Shoot will commence next year.