நடிகர் ரவி மோகன் வீட்டில் ஏற்பட்ட சோகம், பரபரப்பு சம்பவம்... என்ன ஆனது?
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸே இல்லா நடிகராக வலம் வந்தவர் தான் ரவி மோகன்.
அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களாக நடித்து மக்களின் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தார். அதிலும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் ரவி மோகனுக்கு பட்டிதொட்டி எங்கும் புகழை கொடுத்தது.
சினிமா வாழ்க்கையில் வெற்றிப்பெற்று வந்தவர் சொந்த வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக பிரச்சனையை சந்தித்து வருகிறார்.

புகார்
ஏற்கெனவே தனது மனைவியை பிரிவதாக கூறிய ரவி மோகன் அதில் இருந்து பிரச்சனைகளாக சந்தித்த வண்ணம் உள்ளார்.

கடைசியாக அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது மனைவி மற்றும் அவரது குடும்பம் குறித்து நிறைய விஷயங்கள் கூறியிருந்தார். பின் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இப்படி பேசக்கூடாது என புகார் எழும்ப ரவி மோகன் மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை மற்றும் ரூ. 3 லட்சம் பணம் திருட்டு என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பணிபுரிபவர்கள் மீது இந்த திருட்டு புகார் ரவி மோகன் கொடுத்திருப்பதாக தெரிகிறது.