ஆஸ்காருக்காக ராஜமௌலி இவ்வளவு செலவழித்தாரா? உண்மை இதுதான்
ஆர்ஆர்ஆர்
ராஜமௌலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. பிரதமர் தொடங்கி அனைத்து சினிமா நட்சத்திரங்கள் வரை எல்லோரும் வாழ்த்து மழை பொழிந்தார்கள்.
ஆஸ்கார் விருது தேர்வுக்காக ஆர்ஆர்ஆர் படக்குழு மிகப்பெரிய தொகையை செலவிட்டு இருப்பதாக முன்பிருந்தே ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கார் விழாவுக்கு செல்ல இத்தனை லட்சமா?
ஆஸ்கார் விருது விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு மட்டுமே இலவச பாஸ் கொடுக்கப்பட்டது என்றும், ராஜமௌலி, ராம் சரண் உள்ளிட்டவர்கள் தலா 20 லட்சம் ரூபாய் கொடுத்து தான் விழாவுக்கு சென்று இருக்கிறார்கள் என தகவல் பரவி வந்தது.
அது பற்றி படக்குழுவினர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கின்றனர். பணம் கொடுத்து தான் சென்றதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என கூறி இருக்கின்றனர்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
