மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க
விஜய் டிவியின் முக்கிய ஷோ குக் வித் கோமாளி 6ம் சீசன் நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. வழக்கம் போல ரக்ஷன் தான் இந்த வருடமும் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த வருடம் அவருடன் மணிமேகலையும் தொகுப்பாளராக இருந்தார். ஆனால் ஷோவில் போட்டியாளராக இருந்த VJ பிரியங்கா உடன் நடந்த சண்டை காரணமாக மணிமேகலை வெளியேறிவிட்டார். அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் ஷோவையும் ப்ரியங்காவையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
அதன் பின் ஜீ தமிழுக்கு சென்ற மணிமேகலை தற்போது பெரிய ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.
CWC 6ல் ரக்ஷன் பேச்சு
இந்நிலையில் நேற்று தொடங்கிய குக் வித் கோமாளி 6ல் தொகுப்பாளர் ரக்ஷன் ஒரு விஷயம் பேசி இருக்கிறார்.
'கடந்த 5 சீசன்களாக இருந்த யார் போனாலும் கவலை பட்டதே இல்லை, ஆனால் இந்த சீசனில் யார் போனாலும் கவலைப்படுவேன்' என பேசி இருக்கிறார்.
மணிமேகலையை தாக்கி தான் அவர் இப்படி பேசினாரா? என நெட்டிசன்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
