விஜய்யை வைத்து எப்போது ஒரு படம், கதை தேர்வானதா?- முதன்முறையாக கூறிய இயக்குனர் ஹரி
சினிமாவில் படங்கள் இயக்க ஆசைப்படும் இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல்.
அப்படி விறுவிறுப்பான காட்சிகள், வேகமான கதைக்களம், கொஞ்சம் காதல், நிறைய சென்டிமென்ட், செம பஞ்ச் என எப்போதும் தனது படங்களில் காட்டி தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் ஹரி.
விக்ரம், சூர்யா, தனுஷ் என தொடர்ந்து இந்த நடிகர்களை வைத்து படம் இயக்கிய ஹரி முதல்முறையாக அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து இயக்கிய படம் தான் யானை. இப்படம் அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது, நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
விஜய் படம் குறித்து ஹரி
யானை படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஹரி பேசும்போது, விஜய்யை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது. அவரை நிறைய முறை சந்தித்துள்ளேன், கதைகள் பலவும் கூறியிருக்கிறேன். ஆனால் அதன்பிறகு அந்த கதையை எடுத்துச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் வருங்காலத்தில் கண்டிப்பாக நான் அவரை வைத்து படம் இயக்குவேன் என கூறியுள்ளார்.
பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் படத்தின் சூப்பர் ஃபஸ்ட் லுக்- இதோ